Thursday, February 14, 2013

காதலர் தினம்

உலகம் சொன்ன முதல் உண்மையும், பொய்யும் இதுவே இந்த காதல்!!!

ஒலி கூட்டங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மொழியும், இலக்கணமும் படைபதற்கு முன்னாள் விழி கூட்டங்கள் ஒன்று சேர்ந்து எழுதி படைத்த காவியம் காதல்!!!

கடவுளின் கூடாரத்தில் கிசுகிசுத்த ரகசியங்கள் பிரபஞ்ச வெளியில் கசிந்தபோது அது காதல் எனப்பட்டது ஆம் கடவுள் காதலிதான், காதல் மொழி பேசினான். மனிதனை படைப்பதற்கு முன்னாள் அவன் முழு நேர தொழிலே காதல்!!!

அந்த பெருந் தெய்வங்களும், குட்டி தேவதைகளும்
காதலால் பேசினார்கள்
காதலை பேசினார்கள்
காதலில் பேசினார்கள்!!!

கடவுள் - கடவுள்
கடவுள் - மனிதன்
மனிதன் - கடவுள்
மனிதன் - மனிதன்
காதலால் பேசினார்கள்.

காதலும் புரட்சியும் ஒன்று தான்
இவை இரண்டும் உரச, உரச.
பேச, பேச பற்றிக்கொள்ளும்!!!

பல யுக புரட்சிகளை உருவாக்கியது காதல்.
பல தேசங்களின் எல்லை கோடுகளை நகர்தியது காதல்
காதல் சித்தாந்தங்களை உருவாக்கியது
பல தத்துவங்களை பெற்றெடுத்தது காதல்.

ஆறறிவின் அரைகுறையை உணர்த்துவது காதல், ஏழாம் அறிவின் எல்லை கோடு காதல்!!!

காதல் எதையும் வேற்றுமை பாடுதுவதில்லை, சில நேரங்களில் அவை உணர்வுகளை ஒருமையில் சேர்கிறது!!!

ஆகவே காதல் செய்வீர்!!!

காதலர் தின நல்வாழ்த்துக்கள் அன்புடன் சூரியா