திராவிட கழகம் உருவாகிய காலம் முதல் இது வரை காணாத பெரிய அசிங்கம் கனிமொழிக்கு, அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்ற கழகம் அளித்த வரவேற்பு. தெளிவான ஜனநாயக நீரோட்டதில் விழுந்த கல்!!!!. அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும்.
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
நீதிமன்றத்தில் பொய்ச்சாட்சியம் கூறியவனின் வீட்டிலே, மனிதத் தன்மைக்கு மாறான பேய்த்தனம் வந்து சேரும்; அலட்சியத்தினால் வெள்ளெருக்கம் பூக்களும் பாதாள மூலிச்செடியும் படரும்; சோம்பேறித்தனம் சகவாசம் புரியும்; பாம்புச் சீற்ரம் குடியேறும்!
இனி திராவிட குடும்பத்தில் கலிங்கத்து பரணி கண்ட பேய்யெல்லாம் குடியேறும்!!!!!!!
No comments:
Post a Comment