Sunday, November 20, 2011

நட்பின் வழியில்.(On The Farewell Party)

உன் உணர்வையும், சிந்தனையையும் நான் திருடி எழுதிய எழுத்து வடிவம் இவை.என் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காதே உன் உயிரோட்டதிலும் உணர்ந்துகொள்.விதிகளை விலக்கிவிட்டு வெற்று சடங்குகளுடன் நான் வாழ்ந்த வாழ்கை முதல், நான் யார் என்று நீ இந்த உலகுக்கு உணர்த்திய காலம் வரையிலான இடைவெளிகளை கண்களில் நீர் ததும்ப நான் பதிக்கிறேன். என்னைப்போல்  உணர்வும் உயிரும்  நோக துடிக்கும்  என் நண்பர்களுக்கு இவை அர்பணிக்கிறேன்.

ஆண் பெண் என்ற உருவ வேறுபாட்டின் தர்கத்தில்  விலகி நின்று வேடிக்கை பார்த்ததில் இடைவெளிகள் நீண்டதே ஒழிய, நம் உணர்வுகளும் சிந்தனைகளும் ஒன்றே என இறுதி நாட்களில் உன்னை நோக்கி நான் நடந்த நிமிடங்கள் குறைவுதான்.

யதார்த்தத்தையும் நிதர்சனங்களையும் வெறுப்புகளாக சம்பாதித்த நான் அதை செலவழிக்கும் வித்தையை உன்னுடன் இறுதிகாலத்தில் கற்றுக்கொண்டேன்.
பல இடங்களில் மனிதர்களையும் மன்னிப்பையும் நான் ஏற்றுகொள்ள மறுத்திருக்கிறேன் அதனால் தான் இந்த இடைவெளிகள் எனக்கு பிரிவுகளாக  தெரிகிறது.

நான் விலகி இருக்க ஆசை பட்டிருக்கிறேன் அனால் உன் எதிரிகள் யார் என்று நீ எழுதிய பட்டியலில் எனக்கு முதல் இடம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்கவில்லை.

“எப்போதோ நான் அழுத்தி வரைந்த எல்லைகோடுகள்
இன்று தேசங்கள் இல்லாத
அனாதையாய் மாற்றிவிட்டது ……”
இனி யாரும் வரையாதிர்கள் உங்கள் எல்லைகோடுகளை உணர்வுகள் மீது .

“எங்கேயோ என் சித்தாந்தம்
மொழி பெயர்க்கப்பட்டது அதனால்
இன்று மொழிரேகை இல்லா ஊமையை என்னை மாற்றிவிட்டது………”
இனி யாரும் எழுதாதீர்கள் உங்கள் சித்தாந்தத்தை   பரிபாஷையில்.

நான் சொல்லாத நன்றியையும், கேட்காத மன்னிப்பையும் இன்று ஏற்றுகொள்ளுங்கள் உங்கள் நண்பனில் ஒருவனாய்.

There is no postmodernism in the friendship and it will never change its dimension with effect on time.

You are my friend and I hope you know that’s true, no matter what happens I will stand by you. I’ll be there for you whenever you need. I will always be there even to the end.
Gone – flitted away, you taken the stars from the night and the sun from the day!

Don’t cry because it’s over.  Smile because it’s happened.

நிரந்தரமும் யதார்த்தமும் தேடும் உன் வாழ்கை பயணத்தில் என்றும் உன் நண்பனாய்.

E. Suriya Narayanan,

Kindly visit www.espirantz.wordpress.com.

Sunday, August 15, 2010

நிலைகெட்ட இந்தியா:

நிலைகெட்ட இந்தியா:

20 கோடி இந்தியன் இரவு உணவை உண்ணாமல் தூங்கியபின் நான் எழுதிய எழுத்துகள் இவை.

"மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?"- என்றான் மகாகவி பாரதி.

ஆனால் அடுத்தவன் உணவைவையும், நிம்மதியையும் திருடி தின்னும் உணவு சங்கிலி இன்னும் வலிமையோடு தான் இருக்கிறது, காக்கை கூட்டிற்குள் கருநாகம் புகுந்ததுபோல், நம் நாட்டின் உணவு கொள்கையில் அந்நிய ஆதிக்கம் புகுந்தது ஜனநாயகத்தின் தோல்வியே!!!

இங்கு தான் ஒரு பக்கம் infrastructure பங்குகளும், மறுபுறம் interior decoration இம் பல் இளித்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில் வீராணம் குழாயில் இருந்து துரத்தபாட்ட தமிழன் இன்னும் வீடு தேடி கொண்டு இருப்பான்.

70% இந்தியா மக்கள் விவசாயதில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் இந்த நாட்டில் இன்னும் விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் கிடையாது. அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது.

"கண்ணீரோடு விதை விதைபவன்
பெருமதிப்போடு காட்டு சுமந்து வருவான்"
என்கிறது விவிலியம்(Bible) ஆனால் விதையில் அழுகை ஆரம்பித்து அறுவடை தற்கொலையில் முடிந்த விதர்பா(மராட்டிய) விவசாயி கூறும் உண்மை என்ன.

1 லிட்டர் பாலின் விலை 24 ரூபாய் 1 லிட்டர் குடிநீர் 20 ரூபாய், உற்பத்தி செலவு தெரியாத உத்தமர்களே. அதுவும் pakaged drinking water bottleல, நம்ம ஆளுங்களுக்கு mineral water னு சொல்லி விப்பான்.

பன்னாட்டு நிறுவனகளுக்கு முந்தி விரித்த ஜனநாயகத்தின் செயலால் இன்று உள்ளூர் உற்பத்தி முடங்கியே போனது .1991 இல் கொண்டுவந்த LPG (liberalisation, privatisation, globalisation) இதனால் வந்த விளைவு பண தேக்கம் இதை ஆங்கிலதில் சொல்லுவார்கள் "unequal distribution of income within the country", மேலும் இந்த LPG யால் பாடையில் படுத்த இந்தியா நிறுவனங்கள் எத்தனை.

மக்கி மண்ணாய் போனாலும் போகலாம் வறுமைக்கு வாக்கபட்டவன் வாயில் போக கூடாது என்று சொல்லும் உணவு அமைச்சரும் இந்த நாட்டில் தான் இருக்கிறார்.

Spectrum 0 (zero) loss என்று சொன்னால் ஊர் பையித்தியக்காரன் கூட சிரிக்கிறான் எப்பூடி அரசியல் வாதிகளால் சொல்ல முடிக்கிறது.

DOW chemicals நிறுவனத்தின் போபால் விஷ வாயு தாக்கி உயிர் இழந்தவர்கள் புதைக்க படுவதற்க்கு முன்னாள் நிறுவன முதல்வரை ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்தது விட்டு, உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேடி அலைந்த என் நாட்டு பாதுக்காப்பு அமைச்சகத்தின் நெறியை நாம் அறிந்தவாயே

பணத்துக்கு பல் இளிக்கும் இந்த ஜனநாயகம், வறுமைக்கும், கேள்விக்கும் மௌனியாய் இருப்பது சாபக்கேடே.

இந்தியா முன்னேறவில்லை, பணக்காரர்களுக்காக மாறி இருக்கிறது.

"உழுபவனுக்கு நிலம் சொந்தம்
ஓட்டுபவனுக்கு டிராக்டர் சொந்தம்"
என்ற வரட்டு கம்யூனிச பிரச்சாரம் செய்ய அல்ல இது, ஜனநாயகதின் வழிபறியில் வாழ்வு இழந்த ஒரு இந்தியனின் சொல்.

அன்புள்ள தோழர் தோழிகளுக்கு, நான் தெளிவான இ
ந்திய ஜனநாயகத்தின் நீர் ஓடையில் விழுந்த பாவ கற்களை எண்ணி கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு நினைவுள்ள கற்களை இங்கே எடுத்து இங்கே எரியுங்கள்(இந்தியாவில் நடந்த பெரும் வரலாற்று தவறுகளை சுட்டி காட்டவும் மேலும் அதற்கு தீர்வு இருந்தால் சொல்லுங்கள், இனி ஒரு வீதி செய்வோம் வாழ்வோம் இனி நல்அரசாக).

ஜெய் ஹிந்த்!!!